×

இலங்கைக்கு படகு மூலம் அனுப்ப முயற்சி: தம்பதி, ஏஜென்ட்கள் உட்பட 7 பேர் சிக்கினர்


ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பேக்கரும்பில் தனியார் தங்கும் விடுதியில் சந்தேகப்படும்படி இரண்டு பேர் தங்கி உள்ளதாக நேற்று முன்தினம் இரவு தங்கச்சிமடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனை செய்ததில், ஒரு அறையில் இலங்கை தம்பதியர் தங்கி இருந்தது தெரிந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் இலங்கை வவுனியாவை சேர்ந்த தம்பதி ராஜேந்திரன்(52), சாந்தி(47) என்பது தெரிந்தது. 2017ல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். அகதி முகாம் என தமிழகத்தில் தங்கி இருந்துள்ளனர்.

இவர்கள் மீண்டும் இலங்கை செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். பாஸ்போர்ட் காலாவதியானதால் முறைகேடாக படகில் இலங்கைக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்ததாக தெரிவித்தனர். 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு ஏஜென்ட்களாக செயல்பட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post இலங்கைக்கு படகு மூலம் அனுப்ப முயற்சி: தம்பதி, ஏஜென்ட்கள் உட்பட 7 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Rameshwaram ,Tangachimadam Bakkerum ,Rameswaram ,
× RELATED இன்று தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை...